சிறிலங்கா ரெலிகொம்மில் இணையும் இரு நிறுவனங்கள்!!

 


இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி (SLT) இன் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு பிரபல நிறுவனங்கள் முன் தகுதி பெற்றுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,

பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளட்ஃபோர்ம் நிறுவனம் மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களே இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இதேவேளை, இந்த இரண்டு நிறுவனங்கள் உள்ளடங்கலாக 3 நிறுவனங்கள் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு முன்வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.