சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்றவர்கள் சடலமாக மீட்ப்பு!📸

 


யாழ்.இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்றவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று (20:03:2023) நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. 



மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.


வவுனியா பகுதியைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (வயது 37), மற்றும் சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளரும் அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவரும் குறித்த விருந்தினரும் இன்று மாலை கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.


கடலில் ஒருவர் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு மற்றையவர் முயன்றுள்ளார். இதன் போதே மற்றயவரும் நீரில் மூழ்கியுள்ளார். அவர்கள் இருவரது சடலங்களுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.


சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.