பரீட்சை முறைகளில் மாற்றம்!!


தரம் 12ல் உயர்தரப் பரீட்சையும் தரம் 10ல் சாதாரண தரப் பரீட்சையையும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இதன்படி 

முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம்  எனவும்

இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.