பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்


அரிசி - ஒரு கப்


வெல்லம் - 300 கிராம்


தேங்காய் துருவல் - ஒரு கப்


கல் உப்பு - அரை தேக்கரண்டி


தண்ணீர் - 5 கப்


செய்முறை:


வெல்லத்தை பொடியாக நசுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.


ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கெட்டியாகவும் நைசாக அரைக்கவும். கிரைண்டரை கழுவி அரை கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.


அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை முறுக்கு பிழியும் அச்சியில் மூன்று கண் உள்ள அச்சியில் உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து அதை வெல்ல பாகில் சுற்றிலும் பிழிந்து விடவும். அதை போல எல்லா மாவையும் பிழிந்து விடவும்.


கிரைண்டரை கழுவி எடுத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்து பொங்கி வரும் போது சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.


மாவை பிழிந்தவுடன் கரண்டியை வைத்து கிளறக் கூடாது. ஆனால் சிம்மில் வைத்த பின்னர் ஒரு முறை மெதுவாக கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து திக்கானதும் இறக்கி விடவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.


சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.