முதல் இந்திய வாக்காளர் அடையாள அட்டை பெற்ற இலங்கை பெண் !


இந்திய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அடையாள அட்டையை இந்தியாவில் பிறந்த இலங்கை பெண்ணொருவர் முதன்முறையாக பெற்றுள்ளார். 

திருச்சியில் - கோட்டைப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் என்பவருக்கே இவ்வாறு இந்திய வாக்குரிமை கிடைத்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நளினி, 1986ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார்.குடியுரிமை இல்லாத நிலையில், அதனைப் பெற்ற கோட்டப்பட்டு முகாமின் முதல் அகதியாக வாக்களிக்கும் உரிமையைப் பெற வேண்டும் என 2021இல் தீர்மானித்துள்ளார்.

இதன்போது, இந்திய கடவுச்சீட்டுக்காக அவர் முன்வைத்த விண்ணப்பமானது பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.

எனினும், 2022 ஆகஸ்ட் 12 அன்று சென்னை மேல் நீதிமன்றத்தினால் நளினியின் பிறப்பு மண்டபத்தில் என்பதைக் கருத்திற் கொண்டு, அவருக்கு இந்திய கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.குறிப்பாக, 1950 ஜனவரி 26 மற்றும் 1987 ஜூலை 1இற்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995இன் பிரிவு 3இன் படி, பிறப்பால் குடிமகன் ஆவார் என்பதனடிப்படையில் அவருக்கு இந்த வாய்ப்பினை நீதிமன்றம் வழங்கியது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.