ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை !

 


ஸ்ரேல் (Israel) மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஜி7 அமைப்பிடமிருந்து உரிய பதில் கிடைக்க வேண்டும் என ஜேர்மனியின் (German) வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் (Annalena Baerbock) தெரிவித்துள்ளார். 

ஜி7 அமைப்புடன் இத்தாலியில் (Italy) இடம்பெற்ற கூட்டத்தில் விவாதித்தது குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், "ஈரானின் இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலளிக்க வேண்டும்.ஏனென்றால்,  நாங்கள் ஜி7 அமைப்பில் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் குறித்து கூடுதலாக விவாதித்து கொண்டு தான் இருக்கின்றோம். 

இந்நிலைமை மேலும் அதிகரித்தால் இரு நாட்டு மக்களுக்கும் ஆபத்து” என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை ஜேர்மனியின் சான்சிலரான ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), இஸ்ரேல் தானாக ஒரு பாரிய தாக்குதலை மேற்கொள்ளாது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.