பறவைகளால் குழப்பமடைந்த பொலிஸார்!

 



மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல பறவைகளும் மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


பிரித்தானியாவில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் கார்கள் பழுதடைந்தது போன்று சப்தம் கேட்டது. உடனே பொலிஸார் அங்கு சென்ற போது சாலையில் எந்த வாகனங்களும் இல்லை.


சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது. அப்போது பொலிஸார் சுற்றிலும் பார்த்த போது அங்குள்ள மரத்தில் பறவைகள் சைரன் ஒலி சத்தம் எழுப்பியது தெரிய வந்தது.


ஸ்டார்லிங் என அழைக்கப்படும் பறவைகள் எந்திரங்களின் ஒலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற விடயங்களை பின்பற்றுவது இதன் சிறப்பாக உள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.