போராளிகளே, போராடுபவர்களே பொறுமைகாத்துக் கொள்ளுங்கள்!!
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். நாங்கள் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டவர்கள், தலைவன் வழியில் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்பதிலும் உறுதி கொண்டவர்கள்.
ஒருவரின் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் முடியாவிடின் உளத் தூய்மையுடன் கொஞ்சமேனும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
முனைந்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பது எம் தலைவர் சொல்லித்தந்த பாடம்.
தலைவர் வீரச்சாவு, துவாரக ஊடக எம்முடன் தொடர்பில் இருக்கிறார், இறப்பு இல்லாத புனித வழிகாட்டியாக வாழ்கிறார் என்று மூன்று அணிகளாக குறிப்பிட சிலர் பிரிந்து கிடக்கின்றார்கள். உரிமையுடன் கேட்கின்றோம் இதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இவர் இதைச் செய்வதால் தலைவரைப் பாதுகாக்க, தலைவரின் சிந்தனையை பாதுகாக்க நான் இதை செய்கின்றேன், நாங்கள் இதைச் செய்கின்றோம் என்ற உங்களின் குறுகிய நோக்கங்களில் இருந்து வெளியேறி ஆயிரம் ஆயிரம் வீரர்கள் நேசித்த தமிழீழக் கனவை நினைத்துப் பாருங்கள்.
போராளிகளே, போராடுபவர்களே; இவர்கள் துரோகிகள், இவர்கள் கெட்டவர்கள் என்ற உங்களின் அனுபவ முடிவுகளின் அடிப்படையில் நீங்களே ஓர் முடிவேடுத்து ஆரோக்கியமானவர்களின் பின்னால் அல்லது ஆரோக்கியமான முடிவின் பின்னால் அணி சேர்வதாக எண்ணி ‘எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி’ முரண்பாடுகளை ஏற்படுத்தாதீர்கள்.
மே 18, முள்ளிவாய்க்கல் நெருங்கி விட்டது அனைவரும் தலைவரின் இருப்புநிலை தொடர்பான உங்களின் எண்ணக் கிடக்கைகளை மௌனித்துக் கொள்ளுங்கள், “தலைவர் வழியில் தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என்ற ஒற்றை உறுதியை மட்டும் உங்களின் உள்மனங்காளி ஓயாது நினைந்துருகி நில்லுங்கள்“பக்கச் சார்பின்றி மூன்று சிந்தனைகளையும் புறம்தாள்ளி உங்களை நீங்களே மௌனித்து மே 18 இல் எதுவித குழப்பமும் அற்று தலைவர் வழியில் பௌனமான உறுதி ஏற்று உங்களை அடுத்த கட்ட அரசியல் போருக்கு தயாராக்கிக் கொள்ளுங்கள்.
என்றும் உண்மையுடன் தேசப்பற்றாளன்.
கருத்துகள் இல்லை