வெடித்துச் சிதறிய கையடக்க தொலைபேசி!📸

 







கடும் வெப்பத்தால் காருக்குள் வெடித்துச் சிதறிய கையடக்க தொலைபேசி


நாட்டில் பல பகுதிகளில் ஜனவரி மாதம் முதலே வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்பநிலை வழமை நிலையிலும் பார்க்க உயர் மட்டத்தில் தற்போது காணப்படுகிறது.


கடும் வெப்பநிலை சிலருக்கு சிலவேளை பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி கடும் வெப்பதால் வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.


இந்த சம்பவம் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.


எனவே, கடும் வெப்பம் நிலவும் காலப்பகுதியில் வெட்ட வெளியில் வாகனத்தை நிறுத்தி கைத்தொலைபேசியை உள்ளே வைத்து விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.