வைகாசி திருக்குளிர்த்தி கண்ணகியம்மன் !


கிழக்கில் கண்ணகியம்மன் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் அதிகாலை முதல் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்துவதை காணமுடிந்தது.

அதேவேளை ஆண்கள் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு இன்று 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறும்.

எட்டாம் சடங்கு எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.