உலகலாவிய ரீதியில் சுமந்திரனின் சுத்துமாத்மாத்துக்கு அளவே இல்லை!


தமிழ்த்தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் அதன் ஓர் அங்கமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஏகமனதாக தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டுமென்று தமிழர் தாயகமெங்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலாகாலமாக பேரினவாத சக்திகளுக்கு ஆதரவாக செயற்படுகின்ற தரப்பினர் அதனை குழப்பியடிப்பதற்கு முனைகின்றனர். 


அத்தரப்பினரோடு சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினரும் இணைந்து தீயாக வேலை செய்து வருகின்றனர். 


அதன் ஓர் அங்கமாக இன்று சுமந்திரனின் நேரடி வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


மூன்று வாரங்களுக்கு முன்பே இந்நிகழ்வுக்கான முன் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு ஊடகங்களில் விளம்பரங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன. 


CTC, GTF, கொழும்பில் உள்ள  வெரிட்டே அமைப்பின் ஏற்பாட்டில் ஐந்து கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் இருநூறுக்கும் குறைவான பார்வையாளர்களே அரங்கில் குழுமியிருந்ததை காணமுடிந்தது.


அதில் 3/2 பங்கு மக்கள் ஞாயிற்று கிழமை தென்னிந்திய திருச்சபையின் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் மதிய உணவும், ஒருவருக்கு 750ரூபாய் பணமும் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் பொது வேட்பாளரை நிராகரிக்குமாறு மக்களிடம் கோரி வருகின்ற சுமந்திரன் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது . 


குறிப்பாக இரண்டு குடும்ப அங்கத்தவர்களே வாழ்ந்து வருகின்ற எனது வீட்டுக்கு நான்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 


அவற்றில் இரண்டு எனது பெயரிலும் , இரண்டு அழைப்பிதழ்கள் எனது சகோதரரின் பெயரிலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. 


இவ்வாறுதான் ஏராளமான நிதியை வீணாக செலவழித்து பெரும்பாலானவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள போதிலும் நிகழ்வு படுதோல்வி அடைந்துள்ளது . 


இவ்வாறான வீண் செலவுகளை உற்று நோக்கும்போது இவர்களின் பின்னணியில் தென்னிலங்கை பேரினவாத சக்திகள் இயங்குகின்றன என்பது தெட்டத்தெளிவாக உணரப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.