யாழில் கூட்டுறவு தினவிழா!
யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபையின் ஏற்பாட்டில் 102 ஆவது சர்வதேச கூட்டுறவுதினவிழா யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபைத் தலைவர் க.மகாதேவன் தலை மையில் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை புதன் கிழமை மு.ப.10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிரதம விருந்தினராக இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை பணிப்பாளர் ஜி.டி. சரத்வீரசிறி, சிறப்பு விருந்தி னராக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவருமான ந.திரு லிங்கநாதன், கௌரவ விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீ சற்குணராசா சிறப்புரையாற்றுவார். அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை