ஜனாதிபதி தேர்தலை ஒட்டுமொத்த தமிழ் சமூகம் புறக்கணிக்க வேண்டும்!

 


வரப்போகும் ஜனாதிபதி  சிங்கள மக்களுக்கே நேர்மையாக வாக்குறுதிகளை  வழங்க முடியாது. சிங்கள பௌத்தத்தையே திருப்தி படுத்த முடியுமா என்பதே சந்தேகம்தான்  அந்த அளவுக்கு பூகோள அரசியல்  புகுந்து விளையாடுகின்றது 


 இந்த நிலையில் அவர்கள் தமிழ் மக்களின் இனபிரச்னை தீர்வு தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து பேசினால் தெற்கில் வர இருக்கும் வாக்குகளும் அவர்களுக்கு கிடைக்காது.


 இந்தத் தேர்தல் காலத்தில் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அனைத்துமே பொய்யானவை ஆனாலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகின்றது.


 தமிழ் மக்கள் இவற்றில் இருந்து தெளிவடைய வேண்டியது ஒரே விடயம் மாத்திரமே நமது பெறுமதியை நாம் இந்த சந்தர்ப்பத்தில் உணர வேண்டும் சிங்கள தேசமாக இருந்தாலும் சரி சர்வதேசமாக இருந்தாலும் தமிழர்களுடைய இனபிரச்சனையின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாத வரையில் தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என்னும் ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும்.


 அதை புரிந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஒட்டுமொத்த தமிழ் சமூகம் புறக்கணிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.