வடக்கு நிர்வாகத்தின் வினைத்திறன் தொடர்பில் எழும் சந்தேகம்.!

 


குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நபர் விசாரணைக்குழுவில் ...வடக்கு நிர்வாகத்தின் வினைத்திறன் தொடர்பில் எழும் சந்தேகம்.


கிளிநொச்சி-ஸ்கந்தபுரம் கொரொனா வைத்தியசாலையில் நிதி மோசடிகளுடன் தொடர்புபட்டு குற்றம் காணப்பட்ட குற்றப்பத்திரம் சுகாதார அமைச்சினால் தாக்கல் செய்யப்பட்ட நபரை பாடசாலையில் இடம்பேற்ற நிதி மோசடியை விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.


வன்னிப்பிரதேச 2 கல்வி வலயத்தில் ஒருமித்து பணிபுரியும் கணக்காளர் ஒருவர் அந்த கல்வி வலய பாடசாலை ஒன்றில் மேற்க் கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றில் உறுப்பினராக பங்குபற்றியது அவ்விசாரணை முறையாக நடந்திருக்குமா என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்துள்ளது. 


குறித்த பாடசாலையின் பெற்றோர், பழைய மாணவர்களால் ஆளுனர் செயலகம், ஜனாதிபதி செயலகம் போன்றவற்றிற்க்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வெறும் கண்துடைப்புக்காக இந்த கணக்காளரை போட்டு விசாரணை நடாத்தப்பட்ட தாக நலன்விரும்பிகள் கருத்துத் தெரிவித்தனர்.


மேலும் இக் கணக்காளருக்கு எதிரான குற்றப்பத்திரம் NP/04/01/INQ/2021/17 கடந்த 09.09.2022 அன்று பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்பட்டதாக இல்லை.


இந்த கணக்காளரே அண்மையில் சம்பத்நுவர பாடசாலை க்கான நிதியை ஒதுக்காமல் விமர்சனங்களுக்கு உட்பட்டதும் குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.