சப்பத்திக்கு அருமையான முட்டை பட்டர் மசாலா செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 10 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க உப்பு - சுவைக்கு
செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கீறி வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும். பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.. பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!
கருத்துகள் இல்லை