அரசாங்கம் யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே சமூக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சந்திரசேகர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன்போது யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்தபோது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை