ஈஸ்ரர் குணடுவெடிப்பு:பொறுப்பற்ற பேச்சு!
ஈஸ்ரர் குண்டு வெடிப்பு நடைபெற்று 6 வருடங்கள் கடந்து விட்டன.
ஆட்சி பிடிப்பை தொலைத்து பின்பு ஆட்சியைப் பிடிப்பதற்கான அரசியல்க கொலைக் களமாக இவ் தாக்குதல் களம் அமைக்கப்பட்டத்தாகத்தான் நம்பப்படுகின்றது.
இதனை குண்டு வெடிப்பு நடைபெற்ற சில நாட்களிலேயே சர்வதே புலனாய்வு ஊடகங்கள் ஆய்வுக் கூற்றாக இவ்வாறுதான் கூறி இருக்கின்றன.
இத் தாக்குதல் நிகழ்விற்கு சில தினங்களுக்கு முன்னரே இலங்கையில் ஆட்சியில் அன்று இருந்த மைத்திரி ரணில் இன் ‘நட்லாட்சி’ அரசிடம் இது பற்றி தெரியப்படுத்தியதாக வெளி நாட்டுப் புலனாய்வுகள் கூறி நின்றதாகவும் செய்திகள் உள்ளன.
இதில் அன்றை ‘நல்லாட்சி’ அரசு மெத்தனமாக அல்லது கண்டு கொள்ளாது செயற்பட்தாகவே இச் சம்பவம் பற்றிய புரிதல் மக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது தற்போது.
இதனால் அந்த ஆட்சியாளர்களும் இதற்கான பதில் கூறல் மட்டும் அல்ல பொறுப்புக் கூறல் இதற்கும் அப்பால் தண்டனை என்றாகவும் தள்ளப்பட்டுள்ளனர் தற்போது.
2009 மே இல் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த மகிந்த சகோதரர்களின் ஆட்சி யுத்தம் முடிந்த பின்பு இனி இலங்கையின் ஆட்சி அதிகாரம் எம் கரங்களை விட்டு எப்போதும் அகலமாட்டாது என்று மமதையில் எல்லாவித்திலும் ஆட்சி செய்ய முற்பட்டனர்.
இதில் இலஞ்சம் ஊழல் பண மோசடி ஆட்சி அதிகாரத் து~;பிரயோகம் ஏதெச்சோகாரம் என்று எல்லாவற்றையும் அவர்கள் கையாண்டனர்.
அதனால்தான் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மட்டும் தாம் ஆட்சி செய்யலாம்… தேர்தலில் வெல்லலாம் என்ற அவர்களின் நம்பிக்கையிற்கு அந்த மக்களே ‘நல்லாட்சி’ என்பதாக முடிவை அறிவித்தனர்.
ஆனால் ‘நல்லாட்சி’யும் மேற்குலகின் வேலைத் திட்டங்களை விருப்புகளக்கு ஏற்ப செயற்பட்டனே ஒழிய இலங்கை மக்கள் பல்லின் சமூகமாக இணைந்து வாழுதல் என்றாக ஆட்சியை நகர்த்தவில்லை
ஆனால் புதிய அரசியல் யாழ்பு சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு என்றான பசப்பு வாரத்தைகளால் ஆட்சியை நகரத்திச் சென்றனர்.
ஆனாலும் இவ்வாறான ஆட்சியினால் அதிகளவு ஆதரவுத் தளத்தை அவர்கள் இழக்கவில்லை.
இந் நிலையில் மகிந்து குடும்பத்தின் ஒருவர் தான்தான் இனி அடுத்த அரசுத் தலைவராக வருவென் என்றாக அக் கட்சியின் ‘ஜனநாயக’ முடிவுகளுக்கு காத்திராமல் போட்டியில் குதித்தார்.
தனது வெற்றியை உறுதி செய்வதற்கு இலங்கையின் பாதுகாப்பை தம்மால்தான் உறுதி செய் முடியும் மாறாக அப்போது ஆட்சியில் உள்ள நல்லாட்சியினால் முடியாது என்பதை அப்பாவி மக்களுக்கு காட்டுவதற்கான மக்களைச் கொலை செய்வும் தயங்கமாட்டோம் என்பதான இராணுவ மூளைச் செயற்பாட்டில் இறங்கினார்.
இதன் வடிவமாக ஈஸ்ரர் குண்டு வெடிப்பு நடாத்தப்பட்டு இருக்கலாம் என்தற்கான தகவல் கூறுகள் அதிகம் உள்ளதாகவே இதுவரை வந்த செய்திகள், அறிக்கைகள் கூறி நிற்கின்றன.
இதற்கு யுத்தம் முடிவுற்ற நிலையில் தாக்குதலகளுக்கு புலிகள் காரணம் என்றாக காட்ட முடியாத சூழல் நிலவிய நிலையில்….
புலிகளின் முதுகு எலும்பை தாம் ஏற்கனே முறித்துவிட்டதாக கூறி கொள்ளும் அவர்கள் புதிய உத்திகளைக் கையாள முற்பட்டனர்.
இதற்கு அந்த அமைப்பின் விதையில் முளைத்த சிலரையும் இஸ்லாமியத் தீவிர வாதம் என்றான சஹரானையும் பாவித்தே இந்த தாக்குதல் அதுவும் கத்தோலிக்க மக்களின் மத நம்பிக்கையான இடத்தை பிரதானப்படுத்தி தாக்குதல் நடாத்தினர்.
இதற்கு அப்பாலும் சில இடங்கள் இந்த தாக்குதலுக்குள் உள்ளானது.
நேரடியாக அல்லது மறைமுக இணைப்பாக செயற்பட்டவரகள் அதிகம் கருவிகளாக அம்பாகவே இன்று உணர முடிகின்றது.
அம்பாகிப் போனவர்களின் சுய புத்தி எங்கே போனது என்பது இங்கு பிரதான கேள்வியாகியும் இருக்கின்றது.
இதில் தான் அவர்களின் மூல வேர் வளர்ப்பு இங்கு பேசப்படுவதாக அது விடுதலைப் புலிகள், வெளிநாட்டு இஸ்லாமிய திவீரவாதம் என்றான கூறுகள் உதவி இருப்பதாக உணர முடிகின்றது.
இந்த தாக்குதலில் பிரதான சூத்திரதாரி சஹரான் என்று உடனடியா முன்னிலைப் படுத்தி இத்தாக்குதலுக்கு பின்னர் இதனை முஸலீம் சமூகம் மீதான வெறுப்பு அரசியலாக கட்டமைக்க பேரினவாதமும் சிறுபான குறும் தேசியவாதமும் வேகம் வேகமாக கட்iமைக்க முனைந்தனர்.
ஆனால் முழுமையிற்கு அண்மையான முஸ்லீம் சகோதரர்கள் அரசியல் வாhதிகள் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துடன் இதற்கு எந்த வகையிலும் தாம் நியாயம் கற்பிக்கப் போவது இல்லை என்றான செயற்பாடுகள் அறிக்கைள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
அதுதான் முஸ்லீம் மக்களின் உள உண்மை நிலையாகவும் எல்லோராலும் உணரப்பட்டது அது தான் சத்தியும் கூட.
இந்நிலையில் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வு அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் இனால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
இதில் பேசிய அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சிவதர்சன் ‘….இலங்கையில் சஹ்ரானின் மத பயங்கரவாதம் இப்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவாகி உள்ளதுடன் கிழக்கில் மத ரீதியான குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க முயலுகின்றார்கள்….’ * என்று பேச்சு கண்டனத்திற்குரியது.
இது ‘முஸ்லீம் மக்களின் உணரவுகளை காயப்படுத்துவதாகவும் இத்தாககுதலுடன் முஸ்லீம் மக்களை பொதுப்படையாக இணைப்பதான உணர்ச்சி வசப்பட்ட பேச்சாகவும் உணர முடிகின்றது.
அந்த வகையில் இந்த பொறுபற்ற பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.
சுமூகங்களிடையே சகோதரத்துவத்தை சமாதானத்தை தியாகத்தை எடுத்துரைக்கும் யேசுபிரானின் கொள்கையாக நம்பும் ஒரு சமய நிகழ்வில் இவரின் பேச்சில் உள்ள பொறுபற்ற தன்மை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த ஈஸ்ரர் தாக்குதலில் மரணம் அடைந்த காயப்பட்ட அனைவரினதும் வலிகளும் துன்பங்களும் நிச்சயம் பலராலும் உணரப்படுகின்றது அந்த வலிகளுடன் இழப்புகளுடன் துன்பங்களுடன் யாவரும் பாகுபாடின்றி இணைந்திருப்பதே சரியானதே.
இதனைத்தான் இலங்கையின் சமான்ய மக்கள் இன மத மொழி வேறுபாடுகள் இன்றி செய்யும் நிலையில் இருக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் இது போன்ற பேச்சுகளை தவிர்க்கும் செயற்பாடுகளில் இது போன்ற நினைவு கூரும் நிகழ்களை நடாத்துபவர்கள் கவனத்தில் எடுத்தாக வேண்டும்.
கூடவே இந்த பொறுபற்ற பேச்சிற்கான தன்னிலை விளக்கத்தை அவர் வெளிப்படுதியாக வேண்டும். தவறான பேச்சிற்கு மன்னிப்பு கோர வேண்டும்
அன்றேல் இதற்கான சட்ட நடவடிக்கையை சிவில் சமூகமாக மக்கள் செய்தாக வேண்டும்.
(* - தமிழ் மிரர் ஊடகத்தில் வந்த செய்தியை ஆதாரமாக கொண்டு இது எழுதப்படுகின்றது)
கருத்துகள் இல்லை