இடப்பெயர்வுகளிலும் இழுபட்டு, முள்ளிவாய்க்கால் வரை பயணித்த ஒரு ஜீவன்!📸


 சமாதான காலத்திலிருந்து எங்களோடு  ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் இழுபட்டு, முள்ளிவாய்க்கால் வரை பயணித்த ஒரு ஜீவன்.  இறுதியுத்தத்தில் எங்கள் குடும்பத்தில் காயப்பட்ட தங்கையை  உடன்  காப்பாற்றிய பங்கும்,  எங்களுடைய நன்றிக்கடனும்  இதற்கும்  உண்டு. இதைவிட எனக்குப்பட வேண்டிய  சன்னங்கள்,  தோட்டாக்களை எல்லாம் தான் ஏந்திக்கொண்டு என்னைக் காப்பாற்றிய வரலாற்றையும்  என்றைக்கும் மறக்கமுடியாது.  


இறுதியில் உயிரே இருக்குமோ என்று தெரியாத நிலையிலே எல்லோரும்  தங்கள் உடைமைகளையும்,  காயப்பட்ட,  இறந்த  உறவுகளையும் கைவிட்டுத்தான் கையறுநிலையாகப் படையினரிடம் சென்றார்கள். அப்படித்தான் எனது குடும்பமும் இனி ஒன்றும் செய்யேலாது என்று இதை ஒரு இடத்தில்  விட்டுச்  சென்றது.  மீண்டும் கடும் தேடுதலின்பின்னர்  உருக்குலைந்த நிலையில்  எங்களிடம்  கிடைத்தது இதுக்கும் ஒரு மறுபிறப்பு என்றுதான் சொல்லலாம். 


"எங்களுக்கானது ஏதோ ஒரு விதத்தில் கிடைக்கும்'"என்ற வாழ்வியல் உண்மை இங்கே வலுப்பெறுகிறது என நினைக்கிறேன். எங்கள் இன அடையாளங்கள், வரலாறுகள்  என்றைக்கும்  எவராலும் அழிக்க முடியாது.  என்னைத் தெரிந்தவர்கள்  ' உனக்கு இனிச் சாவில்லை' என்று சொல்லுவார்கள். அதேபோல்தான் இதுக்கும் ஆயுள் அதிகம்  என்று சொல்லலாம்.


-பிறேமா(எழில்)-





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.