முதலாவது இடத்தினை பெற்று சாதித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்!

 


A/L பரீட்சை பெறுபெறுகளின் படி கிழக்கு மாகாணத்தில் முதலாவது இடத்தினை பெற்று சாதித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்


நேற்று முன் தினம் வெளியாகியிருந்த 2024 ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கிழக்கு மாகாண கல்வி வலயங்களின் தரப்படுத்தல்களின் படி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 


தேசிய பரீட்சை பெறுபேறுகளில் தொடர்ந்து மட்டக்களப்பு கல்வி வலயம் இம்முறையும் சாதித்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். கிழக்கு மாகாணத்தில் பிற்ப்பட்ட நாட்களில் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி வலயமாகவும் இலங்கையிலுள்ள கல்வி வலயங்களில் அதிகஷ்ட , கஷ்ட பிரதேச பாடசாலைகளைமாத்திரம் கொண்ட ஒரு கல்வி வலயமாகவும் இலங்கையில் தேசிய பாடசாலைகள் அற்ற ஒரு கல்வி வலயமாகவும் பௌதீகம் முதல் ஆளணி வரை பல்வேறு வளப் பற்றாக்குறைக்கு குறைவில்லாத வலயமாகவும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் திகழ்கின்ற போதிலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காமல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தொடர்ந்து சாதித்து வருகிறமை கண்கூடு.


இவ் வலயத்தில் கணித விஞ்ஞான தொழிநுட்ப வர்த்தக கலைத் துறை என அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் சாதித்து வருகின்றனர் கலைத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை இவ் வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமள் மகா வித்தியாலய மாணவி பெற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவ் வலய பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்பட்டு நகர்ப் புற பாடசாலைகளுடன் போட்டி போடக்கூடிய ஆசிரிய ஆளணி வசதி உருவாக்கப்பட்டால் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் நிலைநாட்டும் என்பது திண்ணம்.


 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வளப் பற்றாக்குறை நிவர்த்திக்கு தொடர்ந்து உதவி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு இந்த இடத்தில் நினைவு கொள்ளத் தக்கது.  


இவ் வலயத்தில் பல்வேறு வளப் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும் அவை அனைத்தையும் சிறந்த முறையில் முகாமை செய்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர் மதிப்பிற்குரிய யோ. ஜெயச்சந்திரன் சேர் அவர்களையும் வலயத்தின் பதவி நிலை கல்வி அதிகாரிகளையும் ஆசிரிய ஆலோசகர்களையும் பாடசாலைகளின் அதிபர்களையும் ஆசிரியர்களையும் வெற்றிக்கு உருத்துடைய மாணவர்களையும் இந்த வேளையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி சமூகம் சார்பாக பாராட்டுகின்றோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.