ஈகச்சுடர் அன்னை பூபதி அம்மாவின் நினைவுநாளை அரசியலாக்க வேண்டாம்!

 


தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை முன்னிட்டு வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனைத் தடை செய்யுமாறு ம் கோரி  முறைப்பாடு அன்னை பூபதியின் மகளால் செய்யப்பட்டுள்ளது.

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது.

இதன் போது மனித நேயச் செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் நடத்தவும்  அன்னையின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தடுத்து நினைவுநாளை அமைதியாக நினைவுகூருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கோரி அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.