செந்தமிழில் சௌத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா!📸

 


சௌத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
(புதுக்கோவில் கடவுள் மங்கலம்)


எம்பெருமான் அடியார்களே! தென்னாடுடைய சிவனார் எழில்மிகு இங்கிலாந்து நாட்டின் தென்முனையாம் சௌத்தென்ட் மாநகரில் இயற்கை எழில்கொஞ்சும் நெய்தல் சாரலில் எழுந்தருளி உலக உயிர்கள் உய்த்துய்ய அருள்புரிய சித்தம் கொண்டதனால்! திருவள்ளுவர் ஆண்டு 2056 (உலகநிறைவு / விசுவாவசு), மேழத் திங்கள் (சித்திரை) 28ம் நாள் ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை விளக்கு (சுவாதி) விண்மீன்சேர் பதினான்மை (சதுர்த்தசி) பிறைநாள், திறம் (சித்தம்) நிறை நன்நாளில் காலை 9:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை உள்ள நன்நேரத்தில் அருள்ஞானமிகு உலகம்மை உடனாய் கோணேச்சுரப் பெருமானுக்கும். இத் திருக்கோவிலில் எழுந்தருளி அருளாட்சி செய்யும் சுற்றுத்தெய்வங்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடாத்த திருவருளும் குருவருளும் நிறைந்து கைகூடியுள்ளது. 

இக்கால வேளையில் சிவசீலர்களாகிய தொண்டர்கள், மெய்யடியார்கள். பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள திருக்குட நன்னீராட்டு விழாவிலும், மற்றும் ஏனைய வண்டமிழ்ச் சடங்குகளிலும் கலந்து கொண்டு சிவபெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் அன்போடு அழைக்கின்றோம்.


திருக்குடமுழுக்கு விழா ஒழுங்கு

சித்திரை 26(09.05.2025)வெள்ளிக்கிழமை

நண்பகல் 12:00 மணி தொடக்கம்..

மூத்த பிள்ளையார் முதல் நிலை வேள்வி,ஒன்பான் கோள் வழிபாடு, நிலபதி வேள்வி, திருக்கண் மலர்த்தல், அமளி ஏறுதல்,தீபத் திருமகள் வழிபாடு விமானக் கலசம் நிறுத்தல்,இயந்திர பூசை. தெய்வப்படிமம் நிறுவுதல், கலச ஏற்பாடுகள்.வேள்விச்சாலை நுழைவு,முதற்க்கால வேள்வி.


சித்திரை 27(10.05.2025)சனிக்கிழமை

காலை 9:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை.. 

தெய்வங்களுக்குத் திருவெண்ணெய்க்காப்பு சாத்துதல், பால்காப்பு சாத்துதல், இரண்டாம் கால வேள்வி,

நண்பகல்

மூன்றாம் கால வேள்வி,

மாலை

நான்காம் கால வேள்வி, அருள் ஊட்டம்.

சித்திரை 28 (11.05.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 

ஐந்தாம் கால வேள்வி,

காலை 9:00 மணிக்கு பிரதான கலச சிறப்பு வழிபாடு, கலசங்கள் புறப்பாடு. விமானக் கலச நீராட்டு,பிரதான திருக்குட நன்னீராட்டு திருக்கதவு திறத்தல். பதினமர்க்காட்சி,பெருந் திருமஞ்ஞனம்,


சிறப்பு வழிபாடு, வாழ்த்து.


கடவுள் மங்கல நன்னீராட்டுக் காலத்தில் செந்தமிழில் திருச்சீலம் நடாத்தும் திருவருட்சுனைஞர்கள்: 

தலைமை 

🟢அருட்சுனைஞர் சிவகாசி தர்மலிங்கம் சசிக்குமார்(சுவிச்சர்லாந்து)

🟢அருட்சுனைஞர் திருச்சிவவளர் சண்முகலிங்கம் சபீன் (சுவிச்சர்லாந்து)

🟢குருநாதர் உமையொருசிவம் நிகரிலரசு 

🟢முருகுதிரு சின்னத்துரை சிறீரஞ்சன் (அருள்மிகு உச்சிமுருகன் திருக்கோவில் தலைமை அருட்சுனைஞர்) 

🟢அருட்சுனைஞர் தென்னரசு சோமசூரியசிங்கம் காண்டீபன் (அயர்லாந்து முருகன் கோவில்)

🟢அருட்சுனைஞர் ஜெயலட்சுமி இளங்கோவன் 

🟢அருட்சுனைஞர் இரத்தி சுனைஞர் இரத்தினம் கௌரிபாலன் 

🟢அருட்சுனைஞர் செல்லத்துரை குமரக்குன்றன் 

🟢சிவத்திரு அவிரொளிசிவம் தெய்வநாயகம் ராஜ்குமார் 

🟢அருட்சுனைஞர் மன்னொளிசிவம் லோகேந்திரன் தயாபரன் (சௌத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில்) 

அருட்சுனைஞர்களுடன் இணைந்து சிவனடியார்களும் இறைபணியாற்றுவார்கள்.


SOUTHEND SIVAN KOVIL

2 CHURCH WALK, ROCHFORD, SOUTHEND-ON-SEA, SS4 1NL, UK Tel: 0753 569 2693/0796 178 2703/0795 849 1322/0794 008 7652 Email: saivam.southend@gmail.com

Saivanerikkoodam-Southend- UK Registered Charity Number 1212844.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.