கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி படையெடுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள்!
இன்றய காலத்தில் உலகலாவிய ரீதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஆதரித்து அவர்களுடைய செயல்திறனை நோக்கி படையெடுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள்.
ஏன்...?
எதற்காக....?
2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டிய சம்மந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அற்ப சலுகைகளுக்காக விலைபோனதன் காரணமாக.
2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் அரசியல் இயக்கத்தினை உருவாக்கி அதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர் தாயாக பிரதேசமெங்கும் தன்னுடைய போராட்ட குணத்தின் ஊடாக தமிழ் மக்களின் இருப்புக்கான குரலாக தொடர்ந்து குரல் கொடுத்தவர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் Gajendrakumar Ponnambalam .
அவரின் விட்டுக் கொடுபற்ற தமிழ்த் தேசிய கொள்கை நிலைப்பாடுகள் தான் இன விடுதலை அரசியலுக்கான தலைமைத்துவ பண்பாக இருப்பதினாலும் இன்றைய மத்திய அரசாங்கத்தினை தனிநபராக நின்று எதிர்ப்பதாலும் .
இன்று தலைவர்கள் வருகிறார்கள்,
நாளை தமிழ் மக்கள் இன உணர்வுடன்
ஒற்றை தலைமையின் கீழ் அணி திரள்வார்கள்.
வரலாறு சரியானவர்களை அடையாளப்படுத்தும்.
கருத்துகள் இல்லை