தொடரூந்து விபத்துகள் குறித்து எச்சரிக்கை!!
இலங்கையின் தொடருந்து பாதை வலையமைப்பில் சில தொடருந்து நிலையங்களில் காணப்படும் சமிக்ஞை தொகுதிகளில் உள்ள கோளாறு காரணமாக எதிர்வரும் காலங்களில் பெரும் தொடருந்து விபத்துகள் ஏற்படலாம் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் . செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் செயல்பாட்டில் உள்ள தொடருந்து ஒளி வர்ண சமிக்ஞை அமைப்பு 1962 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் எளிமையான முறை மூலம் இயக்கப்படுகிறது.
இந்த வர்ண சமிக்ஞை அமைப்புகள் அனைத்தும் மருதானை தொடருந்து நிலையத்தில் அமைந்துள்ள மத்திய தொடருந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படுகின்றன.
அத்தோடு கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள தொடருந்து வர்ண சமிக்ஞைகள் கண்டி, நவலப்பிட்டி மற்றும் அனுராதபுரம் துணை தொடருந்து அலுவலகங்களால் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இதுபோன்ற நிலைமைகளின் கீழ் தொடருந்துகளை இயக்குவது மிகவும் ஆபத்தானது என்று தொடருந்து தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை