80 உறுப்பினர்களுக்கு அமெரிக்க விசா இரத்து!
செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பாக, பலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பலஸ்தீன ஆணைக்குழுவின் 80 உறுப்பினர்களின் விசாக்களை அமெரிக்கா மறுத்து இரத்துச் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேளை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் இந்தக் கட்டுப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக பலஸ்தீன ஜனாதிபதி நியூயோர்க்கிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் இவ்வாறு விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை