‘யாழ்தேவி’ புகையிரத தலைமை கட்டுப்பாட்டாளர் கைது!


 ‘யாழ்தேவி’ புகையிரத தலைமை கட்டுப்பாட்டாளர், கடமை நேரத்தில் மதுவருந்திய குற்றச்சாட்டின் கீழ் இன்று அனுராதபுரத்தில் வைத்து கைது!


தமது கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், ‘யாழ்தேவி’ புகையிரதத்தின் பிரதான புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவர் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இந்த புகையிரதம், பிற்பகல் 2.40 மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.


இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


யாழ்தேவி புகையிரதத்திற்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி புறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.