முக்கிய அறிவிப்பு விடுத்த பருத்தித்துறை நகரசபை!!

 


உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் வரும் 01.01.2026 முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நகரசபை பொதுச்சுகாதார பரிசோகரினால் லஞ்ச் சீற் பாவனை தடை குறித்தும் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கி கூறப்பட்டிருந்தது.

2026 ஆம் ஆண்டு முதல் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட எந்த செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்த முடியாது எனவும் அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதனை மீறி செயற்படும் வியாபார நிலையங்களின் வியாபார உரிமத்தை நகரபிதாவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.