வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III)திறந்த போட்டிப் பரீட்சை – 2025


வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III (Grade III) பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை,

2025 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி (சனிக்கிழமை) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.


📌 முக்கிய அறிவுறுத்தல்கள்


🎫 பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards):

பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

16.12.2025 ஆம் திகதி வரை அனுமதி அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், உடனடியாக பரீட்சைப் பிரிவைத் தொடர்புகொள்ள வேண்டும்.


📞 தொடர்பு விபரம்


காலப்பகுதி: 16.12.2025 முதல் 19.12.2025 வரை


நேரம்: அலுவலக நேரத்தினுள்


தொலைபேசி: 021 221 9939

(வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு – பரீட்சைப் பிரிவு)


⚠️ விசேட கவனத்திற்கு


அனுமதி அட்டை கிடைத்தவுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.


அனுமதி அட்டையின் மறுபக்கத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


முக்கிய அறிவிப்பு: முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அனுமதி அட்டையுடன் வருகை தரும் பரீட்சார்த்திகள், எந்த காரணத்தினாலும் பரீட்சை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.


மேலதிக விளக்கங்களுக்காக, 021 221 9939 என்ற இலக்கத்துடன் (பரீட்சைப் பிரிவு) மட்டும் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களும் பரீட்சார்த்திகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.