அபாயத்தில் இலங்கை கிராமம்!!

 



ஆரச்சிகட்டுவ - கருகுபனை (Karukupane) மீன்பிடி கிராமத்தின் கரையோரப் பகுதி மீண்டும் கடுமையாக அரிக்கத்தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கிலிருந்து ஹாமில்டன் கால்வாயுடனும் (Hamilton Canal) மேற்கிலிருந்து கடலுடனும் இணைக்கப்பட்டுள்ள கருகுபனை மீன்பிடி கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் மீனவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கருகுபனை மீன்பிடி கிராமத்தில் பல இடங்கள் கடலால் அரிக்கப்படத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் கருகுபனை கிராமத்தின் கடற்கரை கடுமையாக அரிக்கத்தொடங்கியுள்ளது.

கடற்கரையில் உள்ள பல கட்டடங்களும் கடலால் மூழ்கிவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

கருகுபனை கடற்கரையின் 02 கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதி தற்போது பல இடங்களில் அரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலோரப் பாதுகாப்புத் துறை ஏற்கனவே நடந்து வரும் அரிப்பைக் கட்டுப்படுத்த பாறைச் சுவர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக நிரந்தர தீர்வு தேவை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இல்லையெனில், விரைவில், ஹாமில்டன் கால்வாய் மற்றும் கடல் இணையக்கூடும் என்றும், கருகுபனை கிராமம் வரைபடத்திலிருந்து மறைந்து போகக்கூடும் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இவை நடந்தால், சுமார் 2,000 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும், சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.