இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், செய்தியாளர் பாத்திமா ப்தூனி!
லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, நேரடியாகக் குறிவைத்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், செய்தியாளர் பாத்திமா ப்தூனி இன்று (28) வீரமரணம் அடைந்தார்.
அல்-மனாரின் அலி ஷேப் உட்பட மற்ற பத்திரிகையாளர்களுடன், "பத்திரிகை" என்று தெளிவாகக் குறிக்கப்பட்ட ஒரு வாகனத்தில் பாத்திமா இருந்தார்.
லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரை செய்தி சேகரித்த காலத்திலிருந்து, பாத்திமா தனது சக ஊழியர்கள் அனைவராலும் அறியப்பட்டவராகவும் நேசிக்கப்பட்டவராகவும் இருந்தார்.
அவரது துணிச்சல், உறுதிப்பாடு, தனது தொழில் மீதான என்றும் மாறாத அன்பு, தனது மக்களின் எதிர்ப்புச் செய்தியை உலகிற்கு கொண்டு சேர்க்கும் இடைவிடாத ஆர்வம் ஆகியவற்றால் அறியப்பட்ட அவர், தனது துறை மீதான அர்ப்பணிப்பாலும், போர்க் காலச் செய்திகளை நம் அனைவருக்கும் வழங்கியமைக்காகவும் நம் இதயங்களில் வாழ்வார்.
அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும்..🤲
#hiligt

.jpeg
)





கருத்துகள் இல்லை