சிக்கிய போதைப்பொருள் கும்பல்!!
கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலிப்பதிவுத்தகடுகள், காப்பீட்டுச்சான்றிதழ்கள் மற்றும் வருமான சான்றிதழ்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், 5 லொரிகள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகளுக்குச் சொந்தமான போலிப் பதிவுத் தகடுகள், பதிவு எண்களை போல இருக்கும் போலி வருமான சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டுச்சான்றிதழ் அட்டைகள், அத்துடன் 5400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டுபாயிலிருந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் டுபாய் சுத்தா மற்றும் அவரது சகோதரர் தங்களது வீட்டில் 'ஐஸ்' போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் பொலிஸார் நடத்திய முழுமையான சோதனையின் போது, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத போலி வாகன பதிவுத்தகடுகளையும் பிற ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியபோது, தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, டுபாய் சுத்தா இந்த ஆவணங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை